தற்போது நாயகி படத்தில் த்ரிஷா நடித்து முடித்து விட்டார். இது ஒரு ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ளது . மேலும் இந்த படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து மீண்டும் த்ரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பேய் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு மோகினி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை மதுர, அரசாங்கம் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் நடைபெறவுள்ளது.