இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 2.O மற்றும் பாகுபலி 2 . இந்த இரண்டு படங்களில் பட்ஜெட்டை முறியடிக்கும் வகையில் சுந்தர்.சி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார்.
இப்படத்துக்கு தற்காலிகமாக சங்கமித்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் ஒப்புக்கொண்டால் இப்படத்தில் அவர் அசோகாவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு சரித்திரப்படமாக உருவாகிறது. கூடிய விரைவில் இந்த படத்தில் யார் நடிப்பார் என்பதை பற்றிய ஆதிக்கபுர்வ தகவல் வெளியாகும்.