Anitha Sampath Instagram – இது வரை ஏறத்தாழ 15 வீடுகள் மாறியிருக்கக்கூடும்.ஆனால் என்றும் மறக்க முடியாத முகவரி “ராணி அண்ணா நகர் ஹவுசிங் போர்ட், கே.கே.நகர்”. 🥰
கல்லூரி காலத்தின் முடிவுல வடசென்னைக்கு மாறினேன்.பெரம்பூர்,அகரம்,கொடுங்கையூர்,கொளத்தூர்-னு வடசென்னை ரொம்ப பிடிச்சி போகவே அங்கயே தங்கியாச்சு. கல்யாணத்திற்கு பிறகு பிரபா வீடு இருக்கும் வளசரவாக்கம் வந்தாலும் வடசென்னை நேசிப்பு தான் பிரதானம்.😀
ஆனா பிறந்து வளர்ந்தது எல்லாம் ராணி அண்ணா நகர் தான்.ஒரு பிளாக்கிற்கு 16 வீடுகள்.மார்கழி மாதம் ஆனா 16 வீடுகள்ல உள்ள ஆண்ட்டிகளும் கோலம் போட ஒன்னு சேருவாங்க.எங்க பாட்டி வீடும் அதே பிளாக் தான்.சிறுமியா சித்தியோட சேர்ந்து நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி கலர் அடிப்பேன். நம்ம கோலம் முடியவே ராத்திரி 12 மணி ஆகும்.அதுக்கும் அப்புறம் ஒரு ஒரு பிளாக் ஆண்ட்டிகளும் தனி தனியா படை எடுத்து பக்கத்து பிளாக்குகளோட கோலத்த பார்க்க கிளம்புவாங்க.😝மொத்த ராணி அண்ணா நகரையும் சுத்தி வருவாங்க.நான் சித்தியோட கைய புடிச்சிகிட்டு கோலத்தோட கலர் காம்பினேஷன், கோலம் சைஸ் பத்தியெல்லாம் ஆண்ட்டிகள் சொல்ற கமெண்ட்ஸ கேட்டுக்குட்டே வருவேன்.😋
புத்தாண்டு வந்துட்டா காலேஜ் படிக்கிற அண்ணனுங்கலாம் வீடு வீடா காசு கலெக்ட் பண்ணி மைக்செட்டு கட்டுறதும், தெரு முழுக்க லைட் போடுறதும்னு கோலாகலப்படுத்திருவாங்க.
SPB சார் குரல்ல “happieeeeee new yeaaaaaaar” ங்குற பாடலோட 12 மணிக்கு கேக் வேட்டுற அண்ணனுங்கள கெத்தா பாக்குற கொஞ்ச நேரத்துல, ரொம்ப நேரம் பாட்டு போடுறோம்னு போலீஸ் வண்டி வந்ததும் தெறிச்சி ஓடுறத பாக்க காமெடியா இருக்கும்.😄
ராணி அண்ணா நகர் ஹவுசிங் போர்டுனாலே அந்த ஏரியாவுக்கு பரிட்சையப்படாதவங்க கொஞ்சம் பயப்படுவாங்க.🙃
ஆனா வாசல்ல பேன் பாக்கற ஆண்ட்டிகளும்,பால்கனில பள்ளிக்கு தலை வாரிவிடும் அம்மாக்களும்,பிளாக் முகப்புல கூட்டமா உட்கார்ந்து சலசலனு தாயக்கட்டையை உருட்டியாடும் பாட்டி தாத்தாக்களும்,ரேஷன் கடை வாசலில் நிற்கும் நரைத்த தலைகளும், மூக்கு ஒழுகிக்கொண்டே அம்மனமாக ஓடி விளையாடும் மழலைகளும் தான் எங்க ஹவுசிங் போர்டின் அழகு.🤗
திரு.கனல் கண்ணன் அவர்கள் எங்களுக்கு எதிர் பிளாக்ல சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சிறிது காலம் இருந்தாரு.இப்ப வரைக்கும் அத சொல்லி எங்க ஏரியாவில் நிறைய பேர் பெருமைப்பட்டுப்பாங்க.நிறைய பேர் அவரவர் துறையில் சாதித்து இருக்கிறார்கள்.😇
அப்பார்ட்மெட் செய்யும் சாதனைகளை ஹவுசிங் போர்டும் செய்கிறது.பார்க்கும் பார்வை மட்டுமே வேறு!🙂
பழைய நினைவுகளோடு பார்க்கையில் காலாவில் சொல்வது போல் அழுக்கும் வண்ணமாக தெரிகிறது🥰
புகைப்படம் நான் நேற்று க்ளிக்கியது Rani Anna Nagar,k K Nagar | Posted on 19/Jan/2022 13:47:19