Fathima Babu Instagram – இன்று இரவு 8.50 மணிக்கு.
இணைப்புகள் தனித்தனியாக – வாசிப்புக்கு ஒன்றும், வாசிப்புக்கு பின் உரையாடலுக்கு ஒன்றும் இணைப்பில்
Nixson எழுதுகிறார் –
ஒளரங்சீப் வருகிறார்! வருகிறார்! பாராக்! பாராக்!
நாளொரு கல்லெனச் சிறுகதை தேர்வும், வாசிப்பும், உரையாடலுமென, அடுக்கிக் கொண்டெழுந்த மாபெரும் நிகழ்வாக ‘பாத்திமா பாபு சிறுகதை நேரம்’ அமைந்து விடுகிறது.
கண்ணும் அது கருத்துமாக, காற்றுக்கென்ன வேலியென, பாத்திமா பாபுவின் முயற்சியில், 201 முதல் 300 வரையிலான 100 நாட்களில் 64 எழுத்தாளர்களின் கதைகள் ‘பாத்திமா பாபு சிறுகதை நேரம்’ CLUB HOUSE இல் இடம் பெற்றிருந்தன.
இந்த நூறில், நேரில் கலந்து கொண்டு, தமது கருத்துக்களாலும், உரையாடலாலும் சிறப்பித்து, அப்பொழுதுகளை பொன் மாலைப் பொழுதாக்கிய 50 எழுத்தாளர்களில் 27 எழுத்தாளர்கள் பெண்களாக இருந்திருக்கிறார்கள் என்பது சிறப்புக் கவனம் கொள்ளும் விடயமாகும்.
இந்த முந்நூறுக்குள் அடக்கம் கொள் நூறுக்குள் பல சிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. தோழமையும், அதனின் நம்பிக்கையும் புரிதலும் புலப்பட்ட தருணமென, இந்தக் ‘CLUB HUSE’ இல் பாத்திமா பாபு உடன் ‘MODERATOR’ களாக அருள்குமாரன், வேல்முருகன் இருவரும் இணைந்து கொள்கிறார்கள். தொடர்ந்தும், இச்சிறுகதை நேரம் பங்கேற்பாளர்களில் இருந்து, பத்து புதிய கதை வாசிப்பாளர்கள், 285 இல் இருந்து 14 கதை வாசிப்பு நாள்களில் கலந்து கொண்டதும், வாசிப்புப் பயிற்சிக் கற்றலும் கற்பித்தலுமாக ஓர் தமிழ்ச் சமூக மொழி வளமும் செழுமையும் சிறக்கும் படைப்பு நிகழ்வாக இருந்தும் விடுகிறது.
முந்நூறென மையம் கொள் புள்ளியில் முத்தாய்.. முத்தாய்ப்பாய் ‘சாரு நிவேதிதா’, அகம் கொள் கனவும் நிஜமென ‘நான் தான் ஒளரங்கசீப்’ சொல்லெடுத்து, குரல் கொள்ளும் காட்சிக் கலை காண வாரீர்! மனத்திரைச் சினிமா கண்டுணர காலத்தோட வாரீர்! தேடலும் அது அறிவு இலக்கியத்தேடலும் காண வாரீர்! அதில் ‘மனிதம்’, ‘நேசம்’ காண வாரீர்! | Posted on 04/Jun/2022 00:26:13



