R. Sarathkumar Instagram – புகழின் சிகரம் தொட்ட முதல் எழுத்தாளர் அமரர் கல்கியின் அற்புதமான படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் காவியத்தை, திரையில் எப்போது காணப்போகிறோம் என்று பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் உலகளாவிய தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக நாளை வெளியாகிறது பொன்னியின் செல்வன் பாகம் – 1.
Lyca Productions, Madras Talkies – இருபெரும் தயாரிப்பு நிறுவனங்களின் பேராதரவு மற்றும் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் நடிகர், நடிகைகளை ஒன்றிணைத்து, பிரம்மாண்டமான திரைக்காவியமாக பொன்னியின் செல்வன் உருவாகியிருக்கிறது.
கலைஞர்களின் எந்தவொரு முயற்சியும் வெற்றி பெற ரசிகர்களாகிய உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை. ஏற்கெனவே திரையரங்குகளில் முன்பதிவு நிறைவடைந்து வருகிற சூழலில், நவராத்திரி விழா விடுமுறை தினங்களில் கலைஞர்கள், ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக திரையரங்கம் சென்று பொன்னியின் செல்வனை கண்டு மகிழுங்கள்.
சிறந்த தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் இரவு, பகல் பாராமல், அனைவரது கடுமையான உழைப்பால் உருவான பொன்னியின் செல்வன் உங்களை சோழர் காலத்திற்கும், சோழ தேசத்திற்கும் அழைத்துச் செல்லும் என்பதை திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள். வருங்கால தலைமுறைகள் சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளை அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக இந்த தலைமுறையில் வெளியான இத்திரைப்படம் அமையும் என்ற நம்பிக்கையுடன், உலகளவில் பொன்னியின் செல்வனை மாபெரும் வரலாறு காணாத சாதனை வெற்றி பெறச் செய்வீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
#PonniyinSelvan #September30th #PS1 #madrastalkies #LycaProductions #Maniratnam #chiyaanvikram #AishwaryaRaiBachchan #trisha #karthi #jayamravi #ARRahman #kalki #fdfs #ponninadhi #arr #jayaram #poonguzhali #kundavai #nandhini #arulmozhivarman #vandhiyathevan #aditiyakarikaalan #PeriyaPazhuvettarayar #ChinnaPazhuvettarayar #vanathi #nambi #CholaChola #choladesam | Posted on 29/Sep/2022 23:32:36