Priyankha Masthani Instagram – அருவா மினுக்குதையா🔥
எங்க தேகம் சிலுக்குதையா🔥
வனக்காவலர் வீரப்பன் வணங்கிய குண்டம்பட்டி முனியப்பன் கோவிலில் சிலை வைத்து நூதன வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரியிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலையில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியும், காவிரி ஆற்றங்கரையை ஒட்டியும் அமைந்துள்ளது ஒட்டனூர் பகுதி. ஒருபுறம் வனப்பகுதியும், மற்றொருபுரம் காவிரி ஆறும் என இயற்கை எழிலுடன் பெரிய மரத்தின் அடியில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த முனியப்பன் கோயிலுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை, செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோயிலுக்கு மேட்டூர், கொளத்தூர், கர்நாடக மாநிலம் மாதேஷ்வரன்மலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து வந்து முனியப்பனை வணங்கி செல்கின்றனர். பக்தர்கள் தாங்கள் மனதில் நினைத்தை நிறைவேறும் வகையில் வீடுகட்ட வேண்டும், மருத்துவராக வேண்டும், போலீஸாக வேண்டும், ஆசிரியராக வேண்டும் வண்டி வாகனம் வேண்டும், திருமணமாக வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும் என வந்து கோயில் பூசாரி ஜடையனிடம் பூ வாக்கு கேட்டுகின்றனர்.
#veerappan #kundampatty #nagamarai #boating #muniyappankovil #neruppur #pennagaram #Dharmapuri #priyankhamasthani #priyankha #villagegirl #salemponnu #masthani #priyanka #mastani #pannavadi #onedaytrip #salem | Posted on 07/Sep/2024 12:55:13



