இயக்குனர் ஆகி அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்து விட்டார் அட்லீ. அதும் தெறி படம் மூலமாக இரண்டாம் படமே 100 கோடி வசூல் செய்து முன்னணி இயக்குனர் ஆகிவிட்டார் அட்லீ.
சாதரணமாக இயக்குனர்களுக்கு படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் சம்பளம் என்று தனியாக இருக்கும். மேலும் படம் நன்றாக ஓடினால் லாபத்தில் பங்கும் உண்டு.
இந்த வகையுள் தெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் அட்லீயுன் சம்பளம் உயர்ந்துள்ளது. அடுத்த படத்திற்கு இவருக்கு 3 கோடி சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது அட்லீ தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீ திவ்யா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற படம் உருவாகி வருகிறது. அட்லீ இயக்கபோகும் அடுத்த படைப்பு என்ன என்பது விரைவில் வெளியாகும்.