தமிழ் சினிமாவில் தற்போது பிரச்சனை என்றால் முதலில் தட்டி கேட்பவர் விஷால். இவர் தற்போது திருட்டு விசிடியை ஒழிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
பெங்களூரிலிருந்து சென்னை வந்த தனியார் பேருந்தில் விஜய் நடித்த தெறி படம் திரையிடப்பட்டதாக விஷால் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் விசாரித்து அப்பேருந்தின் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் பேருந்தில் இருந்த பல புதிய படங்களின் சீடிக்களையும் கைப்பற்றியுள்ளனர்.