Vijay Vasanth Instagram – கடந்த இரண்டு தினங்களாக குமரி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம், வேம்பனூர், பெரும்செல்வவிளை, தோப்பூர், மேல சங்கரன்குழி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் மூழ்கின. ஆசாரிபள்ளம் பேயோடு சாலையில் மேலசங்கரன் குழி சந்திப்பில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். பின்னர் அரசு அதிகாரிகளிடம் உடனடியாக நீரினை வெளியேற்றும் படி கேட்டுக்கொண்டேன்.
இதில் வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் பழனிஅஞ்சு, உதவி அலுவலர் பிரிட்டில்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, தலக்குளம் ஆகிய பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையினால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்க வழி வகை செய்தேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India | Posted on 26/May/2021 16:02:34