Vijay Vasanth Instagram – பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன்.
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 15/Jul/2021 10:21:16