Vijay Vasanth Instagram – பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் ராமாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். 119 மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களும், 119 ஏழைப் பெண்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெர்னட் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் வி பிரசாத்,தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம் ஜு ராமசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பாலமுருகன்,வர்த்தக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் கொண்டல்தாசன்,சித்ரா கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் செந்தில் குரு, தணிகாசலம், தணிகைவேல் கரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் லியோ சதீஷ்குமார் செங்கல்பட்டு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சின்ன ராசா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு நல உதவிகளை செய்தார் அவரின் கனவை நனவாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அங்கு உரையாற்றினேன். Kanyakumari, India | Posted on 17/Jul/2021 17:32:17