M. K. Stalin Instagram – தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது.
இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது.
இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது.
இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்!
#LetterToBrethren
Link in Bio | Posted on 14/Feb/2024 18:12:24