இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் பாகுபலி. அதை தொடர்ந்து தற்போது எந்திரன் 2 உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் சுந்தர்.சி இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாக உள்ளது. இதை சமீபத்தில் பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார் சுந்தர்.சி.
இந்த படத்தில் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தான் நடிப்பார் என உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் பலர் சூர்யாவை கூற, ஆனால் சூர்யா பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதனால் அந்த வாய்ப்பு அடுத்து இளைய தளபதி பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடித்தால் கண்டிப்பாக இந்த படம் உலக அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
கூடிய விரைவில் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என வெளியாகும்.