Actors Photos Actor Kamal Haasan HD Photos and Wallpapers July 2020 By GethuCinema Admin July 12, 2020 Related Posts Kamal Haasan Most Liked Photos and Posts 1. 372.8K Likes Download Photo Kamal Haasan InstagramCaption : வீரமே வாகையைச்... Kamal Haasan Top 100 Instagram Photos and Posts 1. 372.8K Likes Download Photo Kamal Haasan InstagramCaption : வீரமே வாகையைச்... Indian 2 – An Intro | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca | Red Giant Pathala Pathala Video | VIKRAM | Kamal Haasan | Anirudh Ravichander | Lokesh Kanagaraj VIKRAM – Porkanda Singam EDM Video | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh VIKRAM Title Track Lyric | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு . என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!@official_ashwinkkumar His wisdom will not die and should not. History might repeat itself in ignorance. Wisdom will and should and yet improve. Hence many more happy returns @dalailama Instagram chat with Mr.AR.Rahman (Part-01) I wish both the Bachchans @amitabhbachchan @bachchan a speedy recovery. I trust the Indian doctors and Sr.Bachchan’s Will to overcome health hazards. Get well soon and become an icon again for survival and wellness. Instagram chat with Mr.AR.Rahman (Part-02) தனித்ததோர் ஆலயம்! ஆட்கூட்டம் அதிகமில்லாத ஒரு தலம். ஒரு தனிக் கலைஞன் தன் இசையை வணிக நோக்கு எதுவுமின்றி, தன் அய்யனை இசையால் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றான். இவன் ஆழ்மனக் கவலைகளை விசாரித்தறிவார் இல்லாததால், தன் இசைக்கருவியை தன் சோகத்தின், பக்தியின், விரக்தியின் கழிப்பிடமாக கருதுகிறான். அவன் தன் ஆலயமும் அதுவே!!! அன்றாடம் அவன் அர்ப்பணிக்கும் அர்ச்சனையும், இவன் மல்கித் திளைக்கும் அத்தெய்வமும் நிஜமென்றால்… தினம் கர்ப்பக்கிரகம் விட்டிறங்கி, இவன் அருகிலமர்ந்து தோள் சாய்ந்து காதலிக்கும் அது! இது போலத் தனித் தபசில் மகரிஷிகள், தெய்வங்களைத் தேடியலைகையில், நம் கண்ணில் பட்டும் படாது கேட்டும் கேளாது எத்தனை மட்டுப் பட்டுப் போனது நம் கலைகள்! விலாசமின்றி வீசும் வியாபாரக் காற்றில் கலைந்தும் மாய்ந்தும் போகிறார்கள் மகாகவிகள். சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியை காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி. Mr. K. Balachander. A mere name with fame that I heard as a teenager. Who would have thought he would take many roles in the life of an actor like me. Benefactor, mentor, collaborator, father and now when I think of his child like energy, I feel the pride of a father. My salute to this important son of Indian Cinema Secularism, citizenship, democratic rights and GST are the chapters deleted from the CBSE syllabus to reduce students’ stress! Probably, they should add Mein Kampf, the History of Ku Klux Klan and Marquis De Sade’s Justine as students’ stress busters! போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது. சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும். எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம். கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பரவிடும் தொற்று நமை பயமுறுத்தும் போது, குணமடைந்தோர் பட்டியல் தாம் நம் நம்பிக்கையின் ஊற்று. அந்த பட்டியலை நீள்விக்க, என் குடும்பம், என் பாதுகாப்பு என பாராமல், மக்கள் சேவையே முக்கியம் என கருதும் மருத்துவர்களுக்கு நம் நன்றிகளும், மருத்துவர் தின வாழ்த்துக்களும். அய்யன் கண்ணதாசருக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி. இன்று உமக்குப் பிறந்த நாளாம். நேற்றும்,இன்றும்,நாளையும் அதுவாகவே கடவது. இத்தகை வித்தகர் அடிக்கடி கிட்டார்! கிட்டா அடிகளை கடைமடை சேர்க்கும் இவ்வற்புத நதிக்கு ஏது பிறந்த நாள்? இன்றும், என்றும் ஓடும் நதி நீர். என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர். வீரவணக்கம்! வீரவணக்கம் வீரவணக்கம் வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து விழைந்து ஈகை செய்தவருக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்! கொள்ளை நோய் நமைக் கொன்று குவிக்கும் வேளையிலும் சக மானுட சேவை கடமை என்ற முன் அணிகட்கு வீரவணக்கம்! நம்மவருக்கு வீரவணக்கம்!! காலை என்றொரு பொழுதில்லாமல் காலம் உலகில் கழிந்தது இல்லை… நாளை என்ற கனவில்லாமல் இரவுகள் என்றும் கடந்தது இல்லை… வேலை என்று ஏற்பது அல்ல, வீடும்,சுற்றமும்,நாடும் எல்லாம்.. தோலை உரித்து ஆராய்ந்திடினும் வண்ணம் என்பது ஒளி மாயை தான். உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள் அனைவருக்குமே பொருந்தும், எனவே கொள்ளைநோய் நமைக் கொல்லும்போதும் மானுடம் மீண்டிடும் மந்திரம் சொல்வோம். நானெனும் அகந்தை மறந்த மனிதர் நிதமும் பேசும் உண்மைச் சொல் அது. மாயமும் இல்லை! மந்திரமில்லை!! நம்மை மிஞ்சும் ஈகையும் அன்பும்!!! தாயிடம் கற்றது போதாதென்றால் வாழ்விடம் கற்பீர், வேறேது வழி? வீரவணக்கம் என்றிடும் கோஷம், வீழ்ந்தவருக்கு மட்டும் அன்று…. நாளை என்றொரு நாளை நோக்கி நடக்கும் நம்மவர் அனைவருக்குமே…. *நாளை நமதே* கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்….. இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள். உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம். ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு? கடந்த 40 ஆண்டுகளில் நம் நற்பணி அணியினர் 4 இலட்சம் யூனிட் இரத்த தானம் செய்துள்ளனர். 4 இலட்சம் உயிர்களைக் காக்கும் முயற்சி அது. உங்கள் உதவி, உயிர் காப்பதை கண்முன் காண்பீர்கள். உலக இரத்த தான தினமான இன்று, இரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம்; நம் தானம் தொடர்வோம். உயிர் காப்போம். மண்ணுக்குள் செல்லும் உடம்பு மாணவர்கட்கு பயன்படட்டும் என்று என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து அறிவித்த போது தன் உடலையும் தானம் செய்ய முன்வந்த மூத்த பத்திரிக்கையாளர் மேஜர்தாசன் அவர்களின் மறைவு, என் தனிப்பட்ட இழப்பும் கூட. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள்தான். தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர்களே கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை. நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு #NaameTheervu இணைந்து மீட்போம் சென்னையை. Call 6369811111 பெண்களுக்கான உதவிகள், பெண்களுக்கான ஆலோசனைகள் அதை பெண்கள்தான் செய்ய முடியும். பெண்களே, நீங்க நினைத்தால் முடியாதது ஒன்றுமே இல்லை. நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு #Naame Theervu இணைந்து மீட்போம் சென்னையை… Call 6369811111 TagsKamal Haasan aka Ulaga Nayagan Previous articleActress Vedhika Instagram Photos and Posts July 2020Next articleActress Tina Desai HD Photos and Wallpapers July 2020