வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த குடும்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி.
இந்த கொடி நமது அடையாளம்.
இந்த சின்னம் நமது நம்பிக்”கை”.
வாக்களிப்பீர் கை சின்னத்தில்.
#NammaVijayVasanth Kanyakumari, India
மாதா பிதா குரு தெய்வம் Kanyakumari, India
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு தளியல் முத்தாரம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நடத்து வருகிறது. நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டோம். திருவட்டார் நகர காங்கிரஸ் தலைவர் சிவசங்கரன் மற்றும் திருக்கோயில் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். Thiruvattar, India
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தோப்பூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது Kanyakumari, India
வரவேற்புக்கு நன்றி.
தர போகின்ற வாக்குகளுக்கும் நன்றி.
#NammaVijayVasanth
மதிப்பிற்குரிய குமரி வாக்காள பெருமக்களே. உங்கள் விலைமதிப்பில்லா வாக்குகளை கை சின்னத்திற்கு அளித்து உங்களில் ஒருவனாகிய என்னை வெற்றி பெற செய்வீர். அதை போல் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் நமது வேட்பாளர்களுக்கு கை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்.
#NammaVijayVasanth Kanyakumari, India
எனது பாசமிகு தந்தை அமரர்
திரு வசந்தகுமார் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் நம்முடன் இல்லாத முதல் பிறந்த நாள். ஒரு தந்தையாக, சமூக சேவகராக,சிறந்த மனிதராக என்றும் ஒரு மாதிரியாக திகழ்ந்தார்.
அவரது சேவையை தொடர்ந்து செய்து அவரின் நற்பெயரை காப்பாற்றுவதே நான் அவருக்கு அர்ப்பணம் செய்யும் பிறந்த நாள் பரிசு. அவரது அன்பும் ஆசியும் என்னை என்றும் வழிநடத்தும். எந்த சூழ்நிலையிலும் அவரது நீங்கா புன்னகை என்றும் துணை.
கொரோனா என்ற கொடிய நோய் காரணமாக நாம் அவரை இன்று இழந்து நிற்கிறோம். இந்த நோயை தோற்கடிக்க உறுதிமொழி எடுப்போம் இந்நாளில். இனியொரு உறவு கொரோனா காரணமாக நாம் இழக்க கூடாது.
திரு வசந்தகுமார் அவர்கள் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார் நம் உள்ளங்களில். Kanyakumari, India
நம்மை என்றும் திரையில் சிரிக்க வைத்த நடிகர் விவேக் அவர்கள் இன்று நம்மை கலங்க வைத்துள்ளார். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு தீரா இழப்பு. இயற்கையை நேசித்த மனிதர் இன்று இயற்கை எய்தினார். எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
மங்களூர் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கப்பல் மோதி இறந்த குமரி மாவட்டம் குளச்சல் பகுதி மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கோரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தோம். Kanyakumari, India
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. மாதவராவ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று 11/04/2021 காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். பண்பானவர், பாசமுள்ளவர்
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிர பற்றுள்ளவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து அவரது மறைவு தமிழக காங்கிரஸிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
விஜய்வசந்த்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
மங்களூர் கடல் பகுதியில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதி கடலில் உயிரிழந்த குமரியை சேர்ந்த மீனவர்கள் ஹென்லின் அலெக்சாண்டர் மற்றும் தாசன் ஆகியோரது உடலுக்கு அவர்களது சொந்த ஊரான குளச்சலில் அஞ்சலி செலுத்தினேன்.
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு சுரேஷ்ராஜன், திரு பிரின்ஸ் மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களை இழந்து வாழும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.
காங்கிரஸ் கட்சி என்றும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. Kanyakumari, India
🙏 Kanyakumari, India
மக்களின் துயரை நீக்குவோம்…
கோவிட் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க திருமதி சோனியா காந்தி அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு குழு அமைத்துள்ளார். ஆட்சியில் இல்லை எனினும் நாட்டு மக்கள் நலன் காக்க காங்கிரஸ் கட்சி எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டிற்கு உரியவை.
தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விரைவில் குணமடைந்து நம் நாட்டிற்காக தொடர்ந்து போராட வாழ்த்துவோம். Kanyakumari, India
உயிர்த்தெழுந்த கர்த்தரின் ஆசீர்வாதம் நம் அனைவருடன் இன்றும் என்றும் இருப்பதாக. அனைவருக்கும் எமது ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India
தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொரோனா உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த தேவைக்கும், சேவைக்கும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். Kanyakumari, India
கொரோனா பேரிடர் காலத்தில் மிகச் சிறந்த முறையில் நிவாரணப் பணிகள் செய்து வரும் நமது இளைஞர் காங்கிரஸ் இயக்கத்திற்கு நம்மால் முடிந்த அளவிற்கு நிதி அளித்து உதவி செய்வோம். https://ycea.in/donate/ Kanyakumari, India